» » » யாழ்ப்பாணத்தில் மாடு கடத்தலில் ஈடுபட்ட போலீஸ் உத்தியோகத்தர் கைது!



யாழ்.மாவட்டத்திலிருந்து மாடு கடத்திச் சென்ற கும்பல் சங்குப்பிட்டி பகுதியில் படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கும்பலுக்குள் சிக்கியுள்ளார்.

மாடுகளுடன் பயணித்த வாகனம் ஒன்று தென்னிலங்கை நோக்கி பயணிப்பது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் படையினர் சோதனையிட்டபோது கடத்திச் செல்லப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......


About

Hi there! I am Admin welcome to my website..Spend less time and get more.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply